பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

அன்பின் அழைப்பு - பாசத்தின் குரல் எங்கிருந்து, யார் இதயத்திலிருந்து வெட்டிப் பாய்கிறது...?

“அண்ணாச்சி!...”

“ஆ! பூங்கோதையா?...என் அருமைத் தங்கச்சி பூங்கோதையா? நீ எப்படி இங்கே அகப்பட்டுக்கிட்டே? கொள்ளைக் கூட்டத்துக்குப் பலியாகும் தலைவிதி என்னோடு மட்டும் தப்பலையா? உனக்குங்கூடவா அந்தத் தலை எழுத்து?...நான் சாவதைப்பற்றி அக்கறைபடல்லே; அச்சப்படலே. ஆனா, உன்னைக் காப்பாற்றி உயிர் தப்பிக்கச் செய்யறதிலே என் உயிர் போனா, அதைத்தான் பெரும்பாக்கியமாய் நினைப்பேன். இது படைத்தவன் பேரில இடுற ஆணை, தங்கச்சி!” என்று வீறு கொண்டு ஆவேசத்துடன் முழங்கலானான் சிறுவன்.

அதே கணம்-

“ஹஹ்ஹா!”

“யார், நீயா சிரிக்கிறாய்? பிஞ்சுக் குழந்தைகளைத் தஞ்சம் அடையச் செஞ்-