பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- பூவை எஸ். ஆறுமுகம் St. அதே வேஷத்தோடேதான் உன்னைக் காப்பாற்ற வந்தாங்க. ரகசியம் வெளியே தெரிஞ்சுடக் கூடாதல்லவா? மூணு நாளாகக் கெஞ்சுறாங்க அப்பா. நீ மனசு மாறவேயில்லை. என்ன, அப்படிப் பார்க் கிறே? ஆமாம், நாம் இப்போது இருக்கும் இடம் ஸ்டுடியோவேதான். நீ முன்பு நடிக்கப் பழகிக்கிட்டியே அதே இடம் தான். படப்பிடிப்புக்காக வேண்டி திருடர்கள் குகையாகக் கட்டப்பட்டிருக்குது. அவ்வளவுதான்! அண்ணா, என் சொல்லை, அப்பாவின் சொல்லை இனி யாவது கேளு. ரொம்பவும் ஜாக்கிரதை யாக நீ இருக்கணும். இல்லாப்போனா, அந்தப் பாவி சர்க்கஸ்காரன் திரும்பவும் உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிடு வான்.' என்றாள் பூங்கோதை. ஆகட்டும் பூங்கோதை. ஆனா என் அருமை நாய்க்குட்டி?' என்று விம்மினான் ஆபாலன். 'கடவுள் கட்டாயம் அதைக் கப்பாற்றுவாரா' என்று ஆறுதல் சொன்னாள் பூங்கோதை. .