இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ்.ஆறுமுகம்
61
யாரும் எதிர்பாராத சமயத்தில் பூங்கோதையிடம் நீட்டினான்.
“அண்ணா!”
“கோதை, இது என்னுடைய பரிசு. உன் பிறந்த நாளுக்கு இந்த ஏழையின் அன்புப் பரிசு!” என்றான் பூபாலன்.
பூங்கோதை மகிழ்ச்சியுடன் அதை வாங்கி அணிந்து கொண்டாள்.
“நானும் உனக்கு ஒரு பரிசு தர வேண்டாமா? இதோ!” என்று சொல்லித் தன் கழுத்திலிருந்த அந்தப் புதிய வைரச் சங்கிலியையே கழற்றி அவன் கழுத்தில் போட்டாள் பூங்கோதை.
பிறகு, இருவரும் சிரித்து மகிழ்ந்து, கைகோர்த்து நடனமாடினார்கள்.
“கட்!... ஓ.கே!... டேக்...!”
டைரக்டரின் குரல்கள் மாறி மாறி ஒலித்தன.
படம் பிடிக்கப்பட்டது.
அடுத்த இரண்டாவது வினாடி