பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

67


விளையாட்டு வெறுப்பாகயிருந்தது. ஆனால், நான் சர்க்கஸில் விளையாட ஆரம்பித்ததிலிருந்துதான் அவருக்கு நிறைய வசூலானது. ஒரு நாள் இந்தச் சர்க்கஸ்காரனை ஏமாற்றி ஓடிவிட, முன் கூட்டியே நான் திட்டங்கள் போட்டிருந்தேன். நானும் என் அருமை நாய்க்குட்டி யும் ‘பார்’ விளையாடிக்கொண்டிருக்கையில், காம்பவுண்ட் சுவருக்கு அருகில் தயாராக நின்ற என் உயிர் தோழி— அன்புச் சகோதரி பூங்கோதையின் காரில் குதிக்கப்போன சமயம், என் ரகசியத்தை எப்படியோ துப்பறிந்திருந்த இவர் என்னைக் குறிபார்த்துச் சுட்டார். நான் மட்டுமே காரில் தொப்பென்று விழுந்தேன், என் நாய்க்குட்டி கை தவறி விட்டதை அப்புறம்தான் அறிந்து கொண்டேன். கடைசியில் என் நாய்க்குட்டி இறந்து விட்டதாக அடுத்த நாள் பேப்பரில் படித்தேன். அதிலிருந்து எனக்கு மூளை குழம்பி விட்டது. கடைசியில் என் மனத்தின் அமைதிக்காகப் பட்டணத்தை விட்டு பூவைமா நகருக்கு வந்தேன்.