பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

75

துக்கிட்டு இருக்கப் போறதாகச் சேதி கிடைச்சுதே?... மெய்யா? அந்த ஷோக் காரனை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே?” என்று கேள்விமேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே போனார் பாலகிருஷ்ணன்.

தன் எதிர்காலத் திட்டம் பற்றிய கேள்விகள் எழுந்தபோது பூபாலன் நறுக்குத் தறித்த மாதிரி கூறின பதில் இது தான்: “ஆமா, எனக்குப் பட்டணம் அறவே பிடிக்கவில்லை. நல்லவங்களுக்கு வரக் காத்திருக்கிற ஆபத்துக்களுக்குக் கணக்கு மில்லே; வழக்குமில்லே. இது தான் என் பிறந்த ஊர். இங்கேதான் நான் படிக்கப்போறேன் ... அப்பாவோடு நானும் வெள்ளாமை செய்யக் கூடப் பழகிக் கிடுவேன். எங்களைப் போன்ற ஏழை பாழைங்களைப் பற்றி எண்ணிப் பார்க் கிற பெரிய மனிதர்கள்தாம் என்வரை தெய்வங்கள்!”

தப்பித்தோம் பிழைத்தோம் என்று நடந்து வந்தான் பூபாலன். வழியில் அவனுடைய நண்பர்கள் மனோரஞ்சிதம்,