பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

தங்கவேலு, வீரமணி, சிங்காரம், ராஜாக்கண்ணு, துரைராசன், தியாகு முதலியோர் குறுக்கிட்டார்கள்.

“பலே, முன்பு நம் ஊர்க்கார எழுத் தாளர் பெயர் திரையிலே வந்தது; இப் போது நம் பூபாலனை படத்திலே சந்திக்கப் போகிறோம். பூவை நகர் இப்போது தான் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது!”

“ஆமா, ஆமா! அதுபோலவே இந்த ஊர்க்காரங்க எல்லாரும் ஒருவருக்குள்ளே ஒருவர் வம்படிச்சிக்கிடாமே, கட்சி மனப் பான்மையை மறந்து, ஒற்றுமையாகி, பூவைமாநகர் என்ற பேரிலே கூட்டுக்குரல் எதிரொலிக்கும் நாள்தான் இந்த ஊருக்கு விடிவு நாளாகும்!” என்று உணர்ச்சி பெருக்கோடு எடுத்துச் சொன்னான் பூபாலன்.

அப்பொழுது—

அவன் அருகாமையில் ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே வந்து நின்றது.