பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

அவன் அந்த நாய்க் குட்டியுடன் தப்பி வாசலுக்கு வெளியே நின்ற பூங்கோதையின் காரில் குதிக்க எத்தனம் செய்த போது, சாக்கஸ்காரன் குறி வைத்துச் சுட்டதை நீங்களே நினைவு வைத்துக் கொண்டிருப்பீர்களே? அப்பொழுது அவன் மட்டுமே தப்பினான். நாய்க்குட்டி சர்க்கஸ் கூடாரத்தில் அகப்பட்டு விட்டதாக எண்ணியிருந்தான்!...ஆனால், பாவம்; அடுத்த நாள் பத்திரிகையில் தான் தப்பிய விவரத்தைப் பற்றியும், அவனுடைய நாய் சுகுமாரனால் சுடப்பட்டு மாண்டதைப் பற்றியும் படித்தபோது, அவனுக்கு மூளை குழம்பிவிட்ட துயரம் மிகுந்த நாட்களையும் அவன் மறத்தல் சாத்தியமே இல்லை!

‘என்னோட அருமை நாய்க்குட்டியைப் பிரிஞ்சு எத்தனை மாசமாயிட்டுது? அது இந்நேரம் உயிரோடே இருந்திருந்தால், பெரிய நாயாக ஆகியிருக்குமே?’ என்று மனத்திற்குள் நினைத்துப் பார்த்த பூபாலனுக்கு அழுகை வந்து விட்டது.

அப்பொழுது—