இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ். ஆறுமுகம்
79
உலகத்து அதிசயங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கிக் கொண்டிருந்தன - ஆஹா! பட்டணத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பூங்கோதையும் அவளுடைய அப்பா டைரக்டர் பரசுராமும் அல்லவா!
உண்மைதானா-அல்லி!... அரக்கன் சர்க்கஸ் சுகுமாரின் புதல்வி!
என்ன அதிசயம்! அன்று அவனைக் கைது செய்து விடுவித்த அதே எஸ். ஐ- அறந்தாங்கி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்!
அவன் முன் நின்று கொண்டிருந்த அத்தனை பேரிலும் பூங்கோதை முன்னோடி வந்தாள்.
“பூபாலன் அண்ணாச்சி! நாங்க இந்த ஊரை விட்டுப் பட்டணத்துக்குப் போன இரண்டு மூணு நாளுக்குள்ளே ரொம்ப ரொம்ப அதிசயங்கள் நடந்து விட்டன.”
“சர்க்கஸ்காரன் சுகுமாரன் கள்ள நோட்டு தயாரிப்பவனாம். அவனுடைய அட்டூழியத்தைப் பொறுக்காமல் அல்லியே