பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடுத்து விட்டன. அவர் பெரியதொரு கள்ள நோட்டுத் தயாரிப்பாளர் என்ற ரகசியத்தை இந்த நாய்க்குட்டிமூலம்தான் போலீஸ் இலாகாவினர் அறிந்தார்களாம். இந்த நாய் மவுண்ட் ரோட் போலீஸ் ஸ்டேஷனில் நின்று குரைத்து. சில சைகைகள் செய்ததன் பேரில், போலீஸ் ஜவான்கள் சிலர் அதைப் பின் தொடரவே, அது சர்க்கஸ் கூடாரத்தை அடுத்த பங்களாவிலிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு வழி காட்டியது. கூடியிருந்த சில பேர்கள் கைது செய்யப்பட்டனர். சுகுமாரன் அப்பொழுது அறந்தாங்கியில் இருப்பதறிந்து, அந்தப் போலீசுக்குத் தகவல் அனுப்பி உடனே அவனையும் கைது செய்துவிட்டார்கள்.

சென்னைப் போலீஸ் இலாகா பராமரிக்கும் ‘துப்பறியும் நாய்’களுக்கு இருக்கும் சில பண்புகள் இதற்கும் இருப்பதால், இதைத் தாங்களே வைத்துக் கொள்ள எண்ணி இந்த நாயின் விவரத்தை அறிய முயன்றார்கள். இது பூபாலன என்ற சிறுவனின் நாய் என்ற செய்தி கிடைத்தது. சிறுவனுக்கு வஞ்சனை செய்தவனைக்