பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

83

கடைசியில் பழிவாங்கி விட்ட இந்த நாயின் நன்றிக் கடனைப்பற்றித் தான் ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது. ஆம்; இந்த நாய்க்குட்டிக் குத்தான் 'கோஹினூர்' என்ற செல் லப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் போலீஸ் இலாகாவிலே. பூபாலன் உணர்ச்சி வசப்பட்டு அப்படியே நின்றான்.

“தம்பி பூபாலன்! இப்பொழுதுதான் நான்கு அதிசயங்கள் நடந்து முடிந்தன. இப்பொழுது ஐந்தாவது அதிசயம் நடக்க விருக்கிறது. உன்னுடைய நாய் கோஹினூர் சாதித்த நல்ல செயலுக்கு சென்னை அரசாங்கத்தினர் உன் நாய்க்கு ஒரு தங்கப் பதக்கத்தையும் உனக்கு இருநூறு ரூபாய் ரொக்கப் பரிசையும் எங்கள் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். கோஹினூரை நீ இஷ்டப்பட்டுச் சென்னை போலீஸ் இலாகாவுக்கு அனுப்பினால், பெருமையுடன் பெற்றுக்கொள்வதாகவும் செய்தி அறிவிக்கும்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால் உன் கதையை முழுதும் அறிந்த பிறகு, அந்த வேண்டுகோளை உன்னிடம் கூறவே மனம் மருகிற்று. ஆகவே, இந்த கோஹினூர் உன்னுடனேயே இருக்கட்டும்!” என்று சொல்லிய போலீஸ் இன்ஸ்-