பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 பாரதிக்குப் பின் கொண்டு பூமிக்கும் வானத்திற்கும், ஜல்லி கட்டியது போன்றிருந்தது. தெருவில் ஜலம் பிரவாகமாய் ஓடியது. சாபம் பிடித்ததுபோல் தெரு வெறிச் சென்றிருந்தது. இந்த மழையில் எங்களைத் தவிர எவன் கிளம்புவான்? எதிர்க் காற்றில் முன் தள்ளிக்கொண்டு ஒருவரை யொருவர் இறுகத் தழுவியபடி ஜலத்தில் இழுத்து இழுத்து நடத்து சென்ருேம், - இடையிடையே இடியில் பூமி அதிர்ந்தது. கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக் கோட்டைபோல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக் கொள்ள வேண்டுவதுபோல், துரத்திக் கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம் போல், அஜைகளின் கோஷம் காதைச் செவிடு படுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறி கொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுகிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப் போல் சுமீலெனப் பொரித்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்த்துவிடும் போலிருந்தன. திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தின் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண்முன் நிற்கிறது அம்மின்னல். மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில், நான் கண்ட காசு குழுமிய கருமேகங் களும், காற்றில் திரை போல் எழும்பி குளவியாகக் கொட்டும் மணலும், கோபுக்கண் போல் சமுத்திரத்தின் சிவப்பும், அலேகளின் சுழிப்பும், அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளேயும், பிணத்தண்டை பெண்கள் போல, ஆடி, ஆடி, அலேந்து, அலைந்து, மரங்கள் அழும் கோரமும்! “இத்தனைக்கும் மூலகாரணி போல் அவள் நின்ருள்.” சாதாரணச் சொற்கள்தான். வரி வரியாக கவனித்தால் எளிய சொல்லடுக்குகள் தான். ஆலுைம், லா, ச. ரா.