பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 வெறும் எழுத்தும் ஒக்லச் சுவடிகளும், புத்தகங்களும் மாத்திரமே இலக்கியம் ஆகிவிட முடியாது. உள்ளதை உள்ளபடி காட்டுவதோ, அல்லது வெறும் கற்பனேக்கு உருக் கொடுப்பதோ, அனுபவத்தை விவரிப்பதோ, இவைகளுக்கு இன்றியமையாதனவாகிய வார்த்தைகளின் .ெ வ ம் ஜோடனையோ மாத்திரம் இலக்கியத்தின் இலக்கியம் அல்ல. வாழ்க்கையின் பண்பே இலக்கியம். இத்தனை சாமர்த்தியங் களையும் மீறி நிறைவு என்று ஒன்று இருக்கிறது. வாழ்க் கையே அதை நோக்கித்தான் பிரயாணம் செய்து கொண் டிருக்கிறது. நெஞ்சும் இதயமும் ஒன்ருய் இழைந்து, சமயமும் சேருகையில் நிறைவின் சாயைகளை ஒரு சமயம் நாமும் அறிந்தோ அறியாமலோ தொடுகிருேம், ஒரு பக்கத் திலோ ஒரு வாக்கியத்திலோ, ஒரு சொற்ருெடரிலோ, பதத்திலோ, அல்லது இரு பதங்களிடையில் தொக்கி, தம் முன்னேயே நின்று கொண்டு நம்மைத் தடுக்கும் ஒரு அணு நேர மெளனத்திலோ, நம் உண்மையான தன்மையை நாம் அடையாளம் கண்டு கொள்கிருேம். அப்படி ஏற்படும் சமாதி நிலையில் கொச்சையின் சிலம்பொலி தனித்து எழு கிறது. - கொச்சையை வெறும் பேச்சளவில் கோண்டு அதற்குத் தீர்ப்பளித்தல் முறையல்ல. ஏனெனில் பேக்க மாத்திரம் பாஷையாகி விடாது. உடல், உள்ளக் கிளர்ச்சியைத் தனக்கோ பிறருக்கோ, வாக்காலோ, சைகையாலோ, வெளிப்படுத்திக் கொள்ள ஏற்பட்ட வழிதான் பாஷை என்று கொள்ளுதல் தவருகாது. அவ்வழியின் ஒரு பெருங் கிளை ஓசை; ஓசையிலிருந்து வாக்கு; வாக்கின் ஆரம்ப, ஆதார உருக்களே கொச்சை என்று தாம் உணருதல் வேண்டும், ஆகையால், பேச்சின் உயிர் மூச்சு கொச்சை உள்ளக் கிளர்ச்சியிலிருந்து தேரிடையாக உருவாகும் கொச்சை, சத்தியத்தின் பாஷை, சத்தியம் எந்த வரம்பிற்கும் அடங் astr-10