பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 197 "ஒரு வண்டி மணலுன்கு பத்து குட்டை அளவு தான் வரும். நல்லா வெள்ளம் வடிஞ்சு ஒணங்கிய மணலு தரலாம், வெலே அது தான். கொறையாது. கேக்காண்டாம்” (கேட்க வேண்டாம்) என்பான். 'ஒரு சாற்ற மழை வந்தாகூடெ எல்லா மன்னும் ச்ச ஒழுகி) ஆற்றிலேயே எறங்கீரும்.” క\ ಫ್ಲಿ ಛಿ! عقبي வெயில் மேலே ஏறிவந்தாச்சு. கோரி (வாரி இடப்பா சீக்கிரம், பாதி வள்ளம் மண்ணு கூட ஆவல்லியே. இல்லாட்டா துரம்பாவை இங்கே கொண்டாருங்கோ, தான் காணிச்சு தாரேன்.” 'இதுக்கொரு அறும்பாதம் வருத்தாமே (முடிவு தேடாமல்) ஒண்ணும் காணவியே கேக்கலியேண் ணு இருந்தா அது ஒட்டும் நல்லதல்ல. மூப்பன் இந்தஒரு விஷயத் திலேயும் இவ்வளவு மோசமாயிட்டு நடந்திர வேண்டாமா யிருந்தது. இப்போ இந்த கடவிலுள்ள (துறையில் உள்ள, இக்கண்ட ஜனங்கள் எல்லாம் கூடிட்டும் மூப்பனுக்கு ஒரு அனக்கவுமில்லே (அசைவுமில்லை).” இப்படி நாவல் முழுவதும் வட்டாரத் தமிழ் கலந்து வந்துள்ளது. மாதவன் இந்த ரக உரை நடை எழுதுவதில் தான் தேர்ந்தவர் என்று எண்ண வேண்டியதில்லை. அழகிய, இனிய நடையில் இடவர்ணனை, பாத்திர வர்ணனை முதலிய வற்றை எழுதக் கூடியவர் என்பதற்கு அவருடைய புனலும் மணலும்’ நாவலே சான்று கூறும் , அதில் ஒரு இடம், தாமோதரன் என்பவனைப் பற்றியது நல்ல உதாரணமாகும். 'காலம் தான் எப்படியெல்லாம் அளர்ந்து உருமாறி வந்து விட்டது. ஆளுலும், தாமோதரன் மட்டும் அதே விசுவாச மனம் கொண்டவளுக அப்படியே இருக்கிருன். இந்தக் காலத்தில் இப்படியொருவன என்று வியப்பாகத் தான் இருக்கிறது .