பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சுஜாதன் “பிளேஞ்சர், திருநிலத்தில் போளுல் போகிறது என்று நின்றது. ஒரு பெண் ஒடி வெள்ளரிப் பிஞ்சு விற்ருள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஒர் இளைஞன் நீல நிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கிஞன், அவன் கழுத்தில் காமிரா மாலே, அந்தப் பிரதேசத்தில் மிகவும் விநோதனுக, அந்நியனுக நின்றன். வெயில் கண்ணுடி அணிந்து சுற்றிலும் பார்த்தான். சின்ன ஸ்டேஷன். கச்சிதமான ஓர் அதை, அதனுள் அவரில் பதித்த, வாய் திறந்த, புராதன டெலிபோனில் ஸ்டேஷன் மாஸ்டர் பேசிக்கொண்டிருந்தார். பிளாட் பாரத்திலேயே கைகாட்டி இறக்கும் வீவர்கள் இருந்தன. தண்டவாளத்துண்டு, மணியாக சரக்கொன்றை மரத்தில் தொங்கியது. அதை இரு தடவை, மஞ்சள் மலர்கள் உதிரத் தட்டிவிட்டு அந்த நீலச் சட்டைக்காரன், அன்னியனை ஒரு வஸ்துவைப்போல் பார்த்துக் கொண்டே சாவியுடன் என் ஜின் திசையில் நடந்தான். கருங்கல் கட்டடம். சற்றே தூரத்தில் மூன்றே மூன்று வீடுகள். ஸ்டேஷனிலிருந்து ஒரு மண் பாதை புறப்பட்டு எங்கேயோ மாயமாய்ச் சென்றது. ஒர் ஆலமரம் ஏறக்குறைய "ஸ்டேஷனே என்னுடையது' என்று அனைத்துக் கொண் டிருந்தது. பா-13