பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பாரதிதாசன்

காலப் பெருங்கடலில் நாளும்
கரைந்த தோற்றமெலாம்
பாலப் பருவமுதல் - எங்கள்
பாரதத் தாய் அறிவாள்
நாலு திசை முழுதும் - கொள்கை
நாற்பதி னாயிரத்தார்
ஆலின் கிளையவைகள் - என்னில்
ஆக்கும் மரம் இவள்தான்

என இந்திய இனத்தின் கிளைகளைத் தாங்கும் அடிமரமாக உருவகப் படுத்தியுள்ளார் பாரதத்தாயை.

உச்சி மலையடி உன்னழகு - தன்னில்
ஓடுஞ் சிறுத்தை மனத்தெளிவு - கட்டுங்
கச்சை யறுத்து வருங்குதிரை - தன்
கருத்தினில் வந்து கலப்பவளே - அடி

தாவிடுவாய் உள்ளத் தாமரை மேல்வந்து
தாக்குது பாருன்றன் காதற்கனல் - எங்கள்
ஆவியுடல் பொருள் அத்தனையும் - உன்றன்
ஆசை நெருப்பில் துரும்புகளாம் - அடி

என்று பாடிச் சுதந்திரக் காதலியோடு தோய்வதில் பேரார்வம் காட்டுகிறார்.

சுதந்திரம் பெற்றவர் எவ்வெவ ரேனும்
அன்னவர் தேவர்க ளாவார் - அஃது
அற்றவர் யாவரும் வாடும் புழுக்கள்

என்று சுதந்திரம் பெற்ற மக்களின் பெருமையையும், சுதந்திரம் அற்றவர் இழிநிலைமையையும் விளக்குகிறார்.

பங்கப் படவிவை பிறரிட மடிமைபொ
ருந்திக் கெடுவதை விடுதலை செய ஒரு
சிங்கத் தினைநிகர் மனவலி அருளுக இதுதேதி!...