பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மறவர்

59

கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சூழ்ந்திருக்கும் மக்களிடம் பேசி வித்தை காட்டுகிறார்கள்.

என்னடா தம்பி?
ஏண்டா அண்ணா!
இதோ பார்தம்பி எலும்புக்கூடு
சதையும் இல்லே சத்தும் இல்லே
ஆமாம் திடுதிடும் அதற்குப் பேரென்ன?
அதன்பேர் தமிழ்நாடு
சரி சரி திடுதிடும்!

சுற்றிலும் உள்ள மக்கள் கூட்டம் எலும்புக் கூட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, என்ன செய்யப் போகிறான் என்ற வியப்போடு. கழைக்கூத்தாடி மீண்டும் பேசுகிறான். சிறுவனும் அவனைத் தொடர்கிறான்.

இந்த எலும்பே எழுந்திருக்க வைக்கிறேன்;
செய்யி செய்யி பார்ப்போம் திடுதிடும்!
அமிஞ்ச எலும்பே ஆடவைக்கிறேன்;
செஞ்சி காட்டு திடுதிடும் திடுதிடும்!
ஓய்ஞ்ச நாட்டிலே உசுருண்டாக்கிறேன்
ஆக்கிக் காட்டடா அண்ணே திடு திடும்!
அடிமோளத்தை திடுதிடும் திடும்!
இந்த எலும்பை இப்படி வைக்கிறேன்.

கூட்டம் விழித்த கண் வாங்காமல் எலும்புக் கூட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறது. கூத்தாடியின் பேச்சு தொடர்கிறது

எலும்பை வச்சா உசிரா வந்திடும்?
மருந்து செய்யனும் தெரிஞ்சுதா உனக்கு?
சரிசெய் திடுதிடும்!
இதோ பார் மாம்பழம் இதைநான் புழியறேன்
புழி புழி திடுதிடும்!
இது ரஸ்தாளி இதையும் புழியறேன்
புழி திடும் திடுதிடும்!