பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திசைதோறும் எதிர்க்கின்றார்; அவர் நாட்டாரே!
ஊன்றி எழும் நிறவெறிப்போர்களைய வில்லை
உலகமக்கள் உறவென்னும் அன்பும் இல்லை
ஈன்றவரும் வெறுக்கும் வண்ணம் வியத்நாம் வீரம் இடுப்பொடித்துப் போடும் உனை எச்சரிக்கை

ஜப்பானில் இரோசிமா, நாகசாகியில் அணுக்குண்டுத் தாக்குதல் நடந்தபோது, அதன் கொடுமையை அறிந்து வருந்திய பாரதிதாசன்,

நானிலம் அனைத்தும் உள்ள
நச்சுப்பாம் பனைத்தும் கூட்டி
வானில் ஓர் அணுக்குண் டாக
வன்பகை நெருப்பழுத்தித்
தான்பொழிந் தானோ பாவி

என்றும்

இன்னும்ஓர் நூறாண் டுக்கும்
இரண்டுரின் சுற்றுப் பக்கம்
ஒன்றுமே முளையா தாமே
வாழ்தலும் ஒண்ணா தாமே

என்றும் உள்ளம் உருகப் பாடியுள்ளார்.

குவெட்டாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கொடுமைகளை எண்ணிப் பாரதிதாசன் எழுதிய பாடல்கள் உள்ளத்தை உலுக்கும் தன்மையன. நிலநடுக்கம், ஆழிப் பேரலை, எரிமலை வெடிப்பு போன்ற கொடுமைகளை முன்கூட்டி அறிவது கடினம். அவ்வாறு அறிந்தாலும் அதைத் தடுப்பது அவ்வளவு எளிதன்று. இக்கருத்தை

நாளைய காலையிலே-இந்த
ஞாலம் உடைவதெனில்
வேளை அறிந்ததனை - நீ
விலக்கல் சாத்தியமோ?