கிச்சடி
காளிதாஸன்
19 ஜனவரி 1916
ராக்ஷஸ தை 6
சமீபத்திலே, பம்பாயில் கூடிய காங்கிரஸ் சபை, முஸ்லீம் சங்கம் முதலியவற்றில் நடந்த உபந்நியாசங்களை வாசித்துப் பார்த்தேன். பெரும்பாலும் ரஸமாகத்தான் இருந்தது. இவை போன்ற பிரசங்கங்களையெல்லாம் தமிழில் தெளிவாக மொழிபெயர்த்து அப்போதைக்கப்போது குட்டிப் புத்தகங்கள் போட்டால் நல்லது. இந்த விஷயத்தில் ஸ்ரத்தை யெடுத்தால், தமிழ் நாட்டுக்கும் உபகாரம்; அவர்களுக்கும் நல்ல லாபமேற்படும். சபைகளிலே இரண்டு விதமுண்டு. சபை முடிந்தவுடனே செய்கை தொடங்குவதற்கு ஆகவேண்டிய விஷயங்களை முடிவு செய்யும் சபை ஒரு வகை. பொதுப்படையாக நியாய நிர்ணயங்கள் செய்து விட்டுக் கலையும் சபை மற்றாெரு வகை. முதல் வகுப்பில் சேர்ந்த சபைகளில் மேற்கோள் எடுத்துக்காட்டுதல் குறைவாக இருக்கும். இரண்டாவது வகுப்பு சபைகளில், அந்தப் பண்டிதர் இப்படிச் சொன்னார்; இந்தப் பண்டிதர் அப்படி எழுதியிருக்கிறார் என்று மேற்கோள் வசனங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும். பம்பாயில் நடந்த சபைகள் பெரும்பாலும் ஷெ இரண்டு லக்ஷணங்கள் சேர்ந்தவையாதலால்