சங்கீத விஷயம்
சி. ச. ப்பிரமணிய பாரதி எழுதுகிறார்
19 டிசம்பர் 1916 கல மார்கழி 15
பொதுப் பள்ளிக்கூடத்தில் சங்கீதம் கற்றுக் கொடுக்கவேண்டும். இது மற்ற நாகரிக தேசங் களில் சாதாரணமாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி ஸங்கீதம். சாஸ்திரத்தை யாருமே பேணும லிருந்தால், பாடகர்கூட அதைக் கைவிட்டு விடு வார்கள். ஆதலால் சுதேசமித்திரன் (விசேஷ அனுபந்தம்) பத்திரிகையில் ரீமான் பூரீநிவாசய் யங்கார் ஸங்கீதம் சீர்திருந்த வேண்டுமென்ற கருத் துடன் எழுதிய லிகிதத்தைப் படித்தபோது எனக்குச் சந்தோஷமுண்டாயிற்று.
இங்கிலீஷ் பாஷையிலே ஒரு பெரிய கவிராயன் எலங்கீத ஞானமில்லாதவரைக் கள்ளரென்றும் குறும்பரென்றும் சொல்லிப் பழிக்கிருன். பாட்டு ஸ்கலருக்கும் நல்லது. தொண்டையும் எல்லாருக்கும் நல்ல தொண்டைதானென்பது என் மதம். கூச்சத் தாலும் பழக்கக் குறைவாலும் பலர் தமக்கு நல்ல குரல் கிடையாதென்று வீணே நினைத்துக் கொள் கிறார்கள்.
பாட்டுக் கற்க விரும்புவோர் காலையில் சூரிய னுக்கு முந்தியே எழுந்து பச்சைத் தண்ணீரிலே