பக்கம்:பாரதித் தமிழ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற் பாலத்தில் வர்ணுசிரம சபை

காளிதாஸன்

7 ஏப்ரல் 19 17 கள பங்குனி 25

வஸந்த காலத்தில், ஒரு நாள் காலையில் இள வெயில் அடிக்கும் நேரத்தில் வேதபுரத்திலுள்ள கடற்பாலத்தின் கடைசியில், நடுக் கடலின் மீது, ஒரு செம்படவன் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அங்கே நானும், எனது நண்பர் சக்ரவர்த்தி சேஷய்யங்காரும் சரீர சுகத்திற்காக நடை பழகப் போளுேம். அங்கு புதிதாகச் செய்து வைக்கப்பட்டிருந்த ராஜாங்கத் தோணிகளின் நிழலிலே போய்ச் சிறிது நேரம் உட்கார்ந்து ஆயாஸம் தீர்த்துக் கொள்ளலாமென்று சேஷய்யங் கார் சொன்னர். அந்த நிழலிலே போய் உட்கார்ந் தோம். என் கையில் சில வர்த்தமானப் பத்தி ரிகைகள் கொண்டு போயிருந்தேன். அவற்றை யெடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். சேஷய்யங் காருக்குப் போது போகவில்லை. அவர் அந்த மீன் பிடிக்கும் செம்படவனிடத்திலே போய்ப் பேச்சுக் கொடுத்தார். அவனே மீன் சரியாகக் கிடைக்க வில்லையென்ற கோபத்திலிருந்தான். சிறிது நேரம் கழித்த பிறகு சேஷய்யங்கார் என்னை நோக்கி,

வீட்டுக்குக் கிளம்பலாம்: புறப்படும்’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/251&oldid=605575" இலிருந்து மீள்விக்கப்பட்டது