பக்கம்:பாரதித் தமிழ்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்தாமணி 33I.

தாள். போலீஸ் பார்த்தலாரதி அய்யங்கார் கையுங் காலும் வெலவெலத்துப் போனார். அவ ருக்கு முகமும் தலையும் வெள்ளை வெளேரென்று நரைத்துப் போய்த் தொண்ணுறு வயதுக் கிழ வனைப்போலே தோன்றிலுைம் உடம்பு நல்ல கட்டு மஸ்துடையதாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆண் புலி வேட்டைகளாடுவதில் தேர்ச்சி யுடையவ ரென்று கேள்வி. பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்படமாட்டேனென்று அவரே என்னிடம் பத்துப் பதினைந்து தரம் சொல்லியிருக்கிரு.ர்.

அப்படிப்பட்ட சூராதி குரளுகிய பார்த்த ஸாரதி அய்யங்கார் கேவலம் ஒரு பாட்டியின் விழிப் புக்கு முன்னே இங்ஙனம் கைகால் வெலவெலத்து மெய் வெயர்த்து முகம் பதறி நின்றதைக் கண்டு வியப்புற்றேன்.

அப்பால் அந்தப் பாட்டி காந்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரைக் சுட்டிக் காட்டி:"இதோ நிற்கிருரே, இந்தப் பிராமணன், இவரா உங்கப்பா?’ என்று கேட்டாள்.

அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைகளை யும் வானத்திலே போட்டு, முகத்திலே வானெளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச,-"ஏ, ஏ, இவரல்லர்; இவர் கன்னங்கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிருரே! எங்கப்பா செக்கச் செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலிருப்பார். இவர் நரைத்த கிழவரன்றாே? எங்கப்பா சின்னப் பிள்ளை’ என்று காந்தாமணி உரைத்தாள்.

அப்போது போலீஸ் பார்த்தஸ்ாரதி அய்யங் கார் காந்தாமணியை நோக்கி:-"உங்கப்பாவுக்கு எந்த ஊரிலே வேலை?” என்று கேட்டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/330&oldid=605703" இலிருந்து மீள்விக்கப்பட்டது