உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


மஹாசக்தி— நீயிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம்– சரி, இப்போது உன்னை வையமாட்டேன், என்னை காப்பாற்று. உன்னைப் போற்றுகின்றேன்.

பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்கூட நீ தண்டனை செய்து கொள். எனக்கு அதிலே ஸ்ந்தோஷமில்லை. எனக்கு பிறர் செய்யும் தீங்குகளை நீ தவிர்க்க வேண்டும். நான் உன்னையே சரணடைந்திருக்கிறேன்.

சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி வெல்க பராசக்தி வெல்க.”

இந்தக் குறிப்பு கவிஞர் பாரதியாரின் வறுகை பிணியை ஓரளவு நன்கு காட்டுகின்றது.

உண்மையான கவிஞரின் உள்ளம் மிக மிக மென்மையானது. அதாவது ஒருதுன்பத்தைப் பூதக்கண்ணாடிபோல் நூறு மடங்கு ஆயிரம் மடங்கு பெருக்கிக்காட்டும் இயல்புடையது. ஆகவே இதிலிருந்து பாண்டிச்சேரியின் வாழ்க்கை எவ்வளவு துன்பமானது என்று ஊகித்து அறியலாம். வறுமைத் துன்பத்தை எவ்வாறு பொறுத்து கொண்டாரோ அறியோம். காந்தியடிகள் ஒருசமயத்தில் சொன்னார்: “நான் நகைச்சுவை ஒன்றுமட்டும் இல்லா போனால், எப்பொழுதோ தூக்கிட்டுக் கொண்டிருப்பேன்” என்று. ஒருவேளை பாரதியாரையும் நகைச்சுவையும் நையாண்டியும் கிண்டலும் இல்லாது போனால் உயிர் தரித்திருக்கவே மாட்டார் என்று ஊகித்து அறியலாம். அவருடைய இயல்பான இந்த நகைச்சுவைதான் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும் உணரலாம்.