38
குள்ளே போய் விரலை விட்டு ஓம் சிவாய நம என்று சொல் அது உன்னைக் கடிக்காது."
தலைமைப் பண்டாரம் பொன்னாஸனத்தினின்றுப் எழுந்து நின்றான். அப்போது அங்கே ஒரு சங்கொலிப் பண்டாரம் 'பம்' 'பம்' 'பம்' என்று சங்கெடுத்து ஊதினான் மற்றொரு சடைப்பண்டாரம் கண,கண, கணவென்று மணி யடித்தான். பிறகு பண்டாரங்கள் அத்தனை பேரும் சேர்ந்து பின்வரும் பாட்டைப் பாடினார்கள்.
"வையகத்தே சடவஸ்து வில்லை.
மண்ணுங் கல்லும் சடமில்லை,
மெய்யுரைப் பேன் பேய் மனமே
மேலும் கீழும் பயமில்லை:-"
எத்தனை படித்தாலும் உலக அனுபவம் இல்லா விட்டால் அது நிறைவான கல்வியாக மாட்டாது என்று இக்கதை மூலம் விளக்குகிறார்.
மேலும், வெறும் பாண்டித்யம் மட்டும் இருந்தால் பயனில்லை. உலக அனுபவம் வேண்டும் என்பதை நகைச் சுவையோடு ஒரு கதையிலே விளக்குகிறார் பாரதியார். கதையைக் கேட்போமா?
சாஸ்தியார் மகன்
ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்துபோன படியால், அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய் "குழந்தாய், ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.
பையன் : "வண்டி ஓடிஞ்சு போச்சு."
சிப்பாய்: "இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்".