பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& குள்ளே போய் விரலை விட்டு ஓம் சிவாய நம என்று சொல் அது உன்னைக் கடிக்காது.” தலைமைப் பண்டாரம் பொன்ஸைனத்தினின்றும் எழுந்து நின்றன். அப்போது அங்கே ஒரு சங்கொலிட பண்டாரம் பம்’ ’பம் பம்’ என்று சங்கெடுத்து ஊதின்ை மற்ருெரு சடைப்பண்டாரம் கண, கண, கணவென்று மணி யடித்தான். பிறகு பண்டாரங்கள் அத்தனை பேரும் சேர்ந்து பின்வரும் பாட்டைப் பாடினர்கள். 'வையகத்தே சடவஸ்து வில்லை. மண்ணுங் கல்லும் சடமில்லை, மெய்யுரைப் பேன் பேய் மனமே மேலும் கீழும் பயமில்லை :-’ எத்தனை படித்தாலும் உலக அனுபவம் இல்லா விட்டால் அது நிறைவான கல்வியாக மாட்டாது என்று இக்கதை மூலம் விளக்குகிரு.ர். மேலும், வெறும் பாண்டித்யம் மட்டும் இருந்தால் பயனில்லை. உலக அனுபவம் வேண்டும் என்பதை நகைச் கவையோடு ஒரு கதையிலே விளக்குகிருர் பாரதியார். கதையைக் கேட்போமா? சாஸ்தியார் மகன் ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்துபோன படியால், அதைப் பார்த்து அழுது கொண்டு நின்முன். அதைக் கண்ட ஒரு சிப்பாய்'குழந்தாய், ஏன் அழுகிருய்?' என்று கேட்டான். பையன் : 'வண்டி ஒடிஞ்சு போச்சு." சிப்பாய் : "இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனர் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்.