61 தீங்கு தடுக்குந் திறமிலேன் என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்." பாஞ்சாலி, வீட்டுமாச்ார்யனிடம் பேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்று துணிச்சலுடன் கூறுகின்ருள். துச்சாதனன் பாஞ்சாலியைத் துகில் உரிதல் என்னும் மாபெரும் பாதகத்தைச் செய்யத் தொடங்குகிருன். இனி வேறு கதியில்லை என்று, என்றும் காப்பவனகிய கண்ண பிரானையே சரண் அடைகிருள். 'துச்சா தனன்எழுந்தே-அன்னை துகிலினை மன்றிடை யுரிதலுற்ருன் அச்சோ, தேவர்களே!-என்று அலறிஅவ் விதுரனுந் தரைசாய்ந்தான். பிச்சே றியவனைப்போல்-அந்தப் பேயனுந் துகிலினை உரிகையிலே, உட்சோ தியிற்கலந்தாள்:-அன்னை உலகத்தை மறந்தாள், ஒருமை புற்ருள் ஹரி, ஹரி, ஹரிஎன்ருள்:-கண்ணு! அபய மபயமுனக் கபயமென்ருள்." பாஞ்சாலியின் துகிலும் வளர்ந்துகொண்டே போகின்றது. நல்ல புண்ணியம் செய்தவர் புகழ் வளர்ந்திடல் போல் வளர்ந்ததாம் அந்தத் துகில். அதனால் துச்சாதனன், கை சோர்ந்துவிட்டான். ஆன்ருேர்கள் கடவுளே வாழ்த்து கிருர்கள். கடைசியில் பீமன் சபதம் செய்கிருன்; அர்ஜுனன் சபதம் செய்கின் முன்: இவ்வளவு இழிவிற்கும் ஆட்பட்டவளாகிய பாஞ்சாலியும் வீரத்தோடு சபதம் செய்கிருள். கதை மிகவும் விறு விறுப்பாகச் செல்கின்றது கம்பன் எவ்வாறு விருத்தத்தைக் கையாண்டானே அவ்வாறே பெரும்பாலும் சிந்து என்னும் எளிய யாப்பு நடையுைக்