பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சுதேசிய-முயற்சி 14B

கல்வியிலே பிரயோஜனகரமான அமிசத்தை மட்டும் கற்றுக் கொள்ளும் படி செய்து எனது தேசத்து ஞானமும் என் குழந்தைகளுக்கு ஏற்படும் படி செய்வேன். இதில் சட்டத்திற்கு என்ன கஷ்டம் சம்பவித்து விட்டது?

இனி பணச் செலவு மிகுதியாவதை உத்தேசித்து எங்கள் வியாஜ்யங்களை பஞ்சாயத்துகள் மூலமாகத் தீர்த்துக் கொண்டால் எந்த சட்டத்திற்கு விரோதம்?

எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கு இருந்த தேக பலமும் செளகரியமும் தீர்க்காயுளும் இந்தத் தலைமுறையிலே ஏன் இல்லை? நாளுக்கு நாள் எனது தேசத்தார்கள் குறுகி, மெலிந்து, துர்பலமடைந்து rணித்து அற்பாயுஸாக ஏன் மடிகிறார்கள்? இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்துக்குரிய கர்லா, சிலம்பு, கசரத் இவை பழகும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன். நான் இப்படிச் செய்வதினால் எந்தச் சட்டம் முறிந்து போகிறது? இங்கிலிஷ் பாட சாலைகளிலே கூட நமது பிள்ளைகளுக்கு ஒருவிதமான சரீரப் பயிற்சி கொடுக்கவில்லையா? இங்கிலிஷ் பள்ளிக் கூடங்களிலே போய்ப் படிக்கத் தகுந்த சொத்தில்லாத பிள்ளைகள் எங்கள் தேசத்திலே கோடிக்கணக்காக இருக்கிறார்கள். அவ்ர்களுடைய சரீரம் பலமடையக் கூடாதென்று எங்கேனும் சாஸ்திரமே தேனும் சட்டமேனும் உண்டா? அதற்குரிய முயற்சிகளை நான் செய்தால் அதனின்று சட்டத்திற்குத் தலை நோவு கண்டுவிடுமா? சிச்சி! சுதேசியம் சட்ட விரோதம் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் நம்மைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுகிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு மயங்குபவர்கள் தேச நலம் அறியாத களிமண் அறிவு கொண்ட மூடர்கள்.

அன்னிய வஸ்து வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாயத்து, சரீரப் பயிற்சி இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத்