O அ.சீனிவாசன் 93
என்றும் தேச முத்து மாரியிடம் கேட்கிறார்.
துன்பமும் இல்லை - கொடும்
துன்பமும் இல்லை.
என்று பாரதி தனது தத்துவ தரிசனத்தில் பாடுகிறார்.
"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பினில் அழியுமடி - கிளியே’’
என்று கிளிப்பாட்டில் கூறுகிறார்.
'இன்பத்தை இனிதெனவும் - துன்பம்
இனிதில்லை என்றும் அவன்
எண்ணுவதில்லை’
என்றும்,
"துன்பத்தில் நொந்து வருவோம் - தன்னை
துரவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவாள்'
என்றும்,
"துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்’ என்றும், -
"துன்பம் இனியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை அன்பு நெறியினில் அறங்கள் வளர்த்திட ’’
என்றும் பாரதி கண்ணன் பாட்டுகளில் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
47. துாற்றுதல் ஒழி
தூற்றுதல் என்பது பிறரை அவதூறு செய்து தூற்றுதலாகும். 'கொடுத்தால் போற்றுவதும் கொடுக்காவிட்டால் தூற்றுவதும் வேண்டாம் .