உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் - 165

உடல் கட்டிற்கு உடல் ஆரோக்கியமும் கல்விப்பயிற்சியும் உடற்பயிற்சியும் கூட முக்கியமானதாகும். கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல. எல்லவற்றிற்கும் மேலானது கல்வியழகேயாகும் என்பது தமிழ்ச் சான்றோர்களின் வாக்காகும். அதாவது கூந்தல் அழகும் ஆடையழகும் மஞ்சள் பூச்சழகும் அழகல்ல, கல்வியழகே அழகாகும் என்பது அதன் பொருளாகும்.

இவ்வாறாக ரூபத்தை செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டுவது நமது முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.

94. ரேகையில் கனி கொள்

ரேகையென்றால் கைரேகை, பூமத்திய ரேகை என்று கூறுவார்கள். சங்கு ரேகை என்றால் வரைகோடுகள். முன்வரைவு என்று பொருள்படும். கனிகொள் என்றால் பயனடைதல் பலனடைதல் என்று பொருள்படும்.

வரைகோடுகள் மூலம் சித்திரம் வரைதல். தேசப்படம் படித்தல் தட்வெப்ப நிலைகள் மற்றும் அதன் மாற்றங்களைக் கண்டறிதல் ஆகியவற்றிற்கு பயன்படத் தக்கவைகளாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த வேலையையும் முன் கூட்டி ஆலோசித்து திட்டமிட்டு நிறைவேற்றுவது மனித செயல்பாடாகும்.

திட்டவரைகளைப் பயன்படுத்திக் கட்டிடங்கள் கட்டுகிறோம். தொழிற் சாலைகளை நிறுவுகிறோம். சாலைகளை அமைக்கிறோம். கல்வி நிலையங்களை நிறுவுகிறோம். பல்வேறு நிர்மாணப் பணிகளை மேற்கொள்கிறோம். ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கிறோம்.

இவ்வாறு முன் கூட்டி திட்ட மிட்டு எந்தக் காரியத்தையும் நிறைவேற்றுவது மனிதனுக்குள்ள சிறப்புத் திறனாகும். மனிதன் சாகுபடிப் பணிகளுக்குத் திட்ட மிடுகிறான். நீர்பபாசனத்திற்கு சாகுபடி நிலங்களைத் தயாரித்து உழுது உரமிட்டுப் பண்படுத்துகிறான். -