பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 மூலப் பழம்பொருளின் நாட்டம் . இந்த மூன்று புவியுமதன் ஆட்டம்! காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள் காளி நடமுலகக் கூட்டம். காலை இளவெயிலின் காட்சி - அவள் கண்ணுெளி காட்டுகின்ற மாட்சி; நீல விசும்பினிடை இரவில் - சுடர் நேமி யனைத்துமவள் ஆட்சி. நாரண னென்று பழவேதம் - சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம்; சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு செல்வம் அறிவு,சிவபோதம். ஆதி சிவனுடைய சக்தி -எங்கள் அன்னை யருள்பெறுதல் முக்தி; மீதி உயிரிருக்கும் போதே - அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி. பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப் பாரதி யன்னையருள் மேவி, கண்ட பொருள் விளக்கும் நூல்கள் . பல கற்றலில் லாதவனேர் பாவி. மூர்த்திகள் மூன்று, பொருள் ஒன்று, - அந்த மூலப் பொருள் ஒளியின் குன்று, நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த நேரமும் போற்று சக்தி என்று.