178 கடல் இனிது. மலை இனிது. காடு இனிது. ஆறுகள் இனியன. உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும் காயும், கணியும் இனியன.பறவைகள் இனியன. மெய்யகத்தே சட வஸ்துவில்லை! மண்ணுங் கல்லும் சடமில்லை! மெய்யுரைப்பேன் பேய் மனமே! மேலும் கீழும் பயமில்லை!- (1) பையப் பையத் தேரடா! படையும் விஷமுங் களவடா! பொய்யு மெய்யுஞ் சிவனடா! பூமண்டலத்தே பயமில்லை!- (2) சாவு நோவுஞ் சிவனடா! சண்டையும் வாளுஞ் சிவனடா! பாவியு மேழையும் பாம்பும் பசுவும் பண்ணுந் தானமுந் தெய்வமடா: (3) எங்குஞ் சிவனைக் காணடா! ஈனப் பயத்தைத் துரத்தடா! கங்கைச் சடையா, காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ!- (4) பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம் பாலை வனமுங் கடலுந் தெய்வம் ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்குந் தெய்வம் எதுவுந் தெய்வம். (5) வையத்தே சடமில்லை, மண்ணுங் கல்லுந் தெய்வம் மெய்யுரைப்பேன் பாழ் மனமே மேலுங் கீழும் பயமில்லைl-' (6)
பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/194
Appearance