பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32] யாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, தந்தியைப் படித்தபோது எனக்கு மகிழ்ச்சி யுண்டாயிற்று. கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது:-"இந்தப் பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி ஸ்ரஸ்வதி என்ற மூன்றுவித வடிவங்கொண்டு துஷ்டரை யெல்லாம் அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலமுதல் இன்றுவரை, பாரததேசத்தில் எல்லாப் பக்கங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிருர்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி யிருக்கிருள். ஒவ்வொரு தனிப் பொருளிலும் நிறைந்து நிற்கிருள். இவளே மாயை, இவளே ச்க்தி; செய்பவளும், செய்கைப் பயனும் இவளே: தந்தையும் தாயும், இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம். இவள் காத்திடுக' என்பது தந்தி. உண்மைதான். ஆனால், 'தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்' என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிருள். ஆக்கல்; அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக ஸ்ம்ரrணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் துடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிருேம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண் புகுதல்.-இம்மூன்றும் கர்ம யோகம் (கிரியா யோகம்) என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்ருர். லெளகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்