பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணில்ை போவான், போவான்; ஐயோவென்று போவான்; வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்; சாத்திரம் வளருது: சூத்திரந் தெரியுது; மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது: மந்திரமெல்லாம் வளருது; வளருது: குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு, சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதி. அந்தரி, வீரி, சண்டிகை, சூலி; குடுகுடு குடுகுடு’

இப்படி அவன் சொல்லிக்கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமை யாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றன். கீழே இறங்கிப் போய், அவனை ஸ்மீபத்தில் அழைத்து, “எந்த ஊர்’ என்று கேட்டேன். சாமி, குடுகுடுக்காரனுக்கு ஊரேது நாடேது? எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லாமோ சுத்திக்கொண்டு வருகிறேன்’ என்றான். அப்போது நான் சொன்னேன் : -

‘உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடிய வரையில் ஸ்விஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான சரிகை வேஷ்டி கொடுக் கிறேன்” என்றேன். அப்போது குடுகுடுக்காரன் சொல்லு கிருன்: ‘சாமி, நான் பிறந்த இடந் தெரியாது. என் னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பன ருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். ஒன்பது கம்பளத்தார் என்ற ஜாதி. எனக்குப்