பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 ஜாதியின் செளகர்யங்களுக்கும் அபிவிருத்திக்கும் பயன் படுமாறு ஆயிரக்கணக்காக யந்திரங்களும், புதிய கருத்துக் களும் லக்ஷக்கணக்காக உண்டாயிருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் தமிழ்ப் பாஷையிலே பெயரும் கிடையாது, மண்ணும் கிடையாது. இப்படி இருக்க நீர் ஏதோ பொதுப்படையாக உருட்டிக்கொண்டு போகிறீர்? புல : அடடா! உனது விவகாரத்தின் நுட்பத்தை என்னென்று சொல்வேன்! நீ ஒயாமல் அடுக்கிக் கொண்டு போன நவீன ஆராய்ச்சிக் கதைகள் எல்ல. ம் தமிழ் நாட்டு ஜனங்களுக்குள்ளே வழக்கமான பிறகல்லவோ அவை தமிழ்ப் பாஷையிலே வழங்குவதற்குச் சுலபமாகும். தமிழ் நாட்டிலேயோ பொது ஜனங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிவதே அருமையாய் இருக்கிறது. வயிற்றுப் பிழைப்பே பெரிய க ஷ் ட மா ய் இருக்கின்றது. ராஜாங்கத்தார் பொது ஜனக் கல்விக்கு மிகவும் வெட்கக்கேடான சிறு தொகை செலவிடுகின்ருர்கள். சிறுபான்மையோருக்குத் தரப்படும் கல்விகூட அவர்களேக் குமாஸ்தாக்களாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கொடுக்கப்படுவதே யன்றி வேறு எவ்விதமான பெருந் தொழிலுக்கும் தகுதி யாக்க அன்று. எனவே இந்நாட்டார் பொதுவாக மிகவும் அறிவு சுருங்கிப் போயிருக்கிருர்கள். இதற்குப் பாஷை என்ன செய்யும்? நீராவியினல் ஒட்டப்படும் ரெயில் வண்டி இந் நாட்டிலே வழக்கமாய் இருக்கிறது. இப்போது பொது ஜனங்கள் அதற்கு வார்த்தை ஏற்படுத்திக் கொள்ளாமலா இருக்கிருர்கள்? மின்சார சக்தியால் தந்தி ஏற்படுத்தப்பட் டிருக்கிறது. அதற்குத் தமிழர்கள் வார்த்தை உண்டாக்கி கொள்ளவில்லையா? கோவணம் இல்லாத நிர்வாண தேசத் தாரின் பாஷையிலே பட்டு அங்கவஸ்திரத்துக்குப் பெயர் கிடையாதென்ருல் அதற்கு அவர்களுடைய பாஷையின் மேல் என்ன குற்றம் இருக்கிறது? துணியைக் கொண்டு