பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் கவிதைகள் 1. வந்தே மாதரம் பல்லவிவந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மம்.இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே-அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப்பறையர்களேனும்-அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்ருே? சீனத்த ராய்விடு வாரோ?-பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஒர் தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்ருே? (வந்தே) ஒன்றுபட் டால் உண்டு வாழ்வு-நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம்-விழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர-இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)