34 மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்; வானையளப் போம்கடல் மீனையளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்; சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத) காவியம் செய்வோம் நல்ல காடுவளர்ப் போம்; கலைவளர்ப் போம்கொல்ல ருலைவளர்ப் போம்: ஒவியம்செய் வோம்நல்ல ஊசிகள்செய் வோம்: உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம். (பாரத) "சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்; நீதி நெறியினின்று பிறர்க்கு தவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்ருேர். (பாரத) 5. எங்கள் நாடு மன்னும் இமயம ையெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே பார்மிசை யேதொரு நூல்.இது போலே? பொன்னுெளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே. I மாரத வீரர் மலிந்தநன் டுை மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் டுை நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் டுை புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரும் நாடே பாடுவம் இஃதை எமக்கிலே ஈடே. &