பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சொல்லும் இவ்வனைத்தும் வேறு குழு நன்மை யுந்தர வல்ல நூல்கெ டாது காப்பள் வாழி அன்னை வாழியே! தேவ ருண்ணும் நன்ம ருந்து சேர்ந்த கும்பம் என்னவும் மேவு வார்க டற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும் பாவ நெஞ்சினேர் நிதம் பறித்தல் செய்வ ராயினும் ஒவி லாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே! இதந்த,ரும்தொ ழில்கள் செய்து இரும்பு விக்கு நல்கினள் பதந்தரற் குரிய வாய பன்ம தங்கள் நாட்டினள் விதம்பெ றும்பல் நாட்டி னர்க்கு வேருெ ருண்மை தோற்றவே சுதந்தி ரத்தி லாசை இன்று தோற்றி னுள்மன் வாழ்கவே!. 7. பாரத மாதா முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்?-எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி.நல் ஆரிய ராணியின் வில். இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடை வில்?-எங்கள் மந்திரத் தெய்வம் பாரத ராணி வயிரவி தன்னுடை வில்.