பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அன்பு சிவம்.உல கத்துயர் யாவையும் அன்பினிற் போகும் என்றே-இங்கு முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன் மொழிஎங்கள் அன்னை மொழி. 10 மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி-தன் மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது வல்லநம் அன்னை மதி. 1I தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம் செய்த தெவர்கவி தை?-அயன் செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட்கவி தை. 12 8. எங்கள் தாய் (காவடிச்சிந்தில் ஆறுமுகவடி வேலவனே' என்ற மெட்டு) தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம்.எங்கள் தாய். I யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு:மேயெங்கள் தாய்-இந்தப் பாருள்ளந் நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடு வாள்.எங்கள் தாய். 2 முப்பது கோடி முகமுடை யாள் உயிர் மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள்எனிற் சிந்தனை ஒன்றுடை யாள். 3