பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வார முறுஞ்சுவை யின்னற வுன்கணி வான மருந்தெனவே மானுயர் பாரத தேவி விரும்பிடும் வந்தே மாதரமே. 2 24-2-1906 22. என்னே கொடுமை மல்லார் திண்டோட் பாஞ்சாலன் மகள்பொற் கரத்தின் மாலுற்ற வில்லால் விஜயன் அன்றிழைத்த விந்தைத் தொழிலை மறந்திலரால் பொல்லா விதியால் நீவிரவன் போர்முன் னிழைத்த பெருந்தொழில்கள் எல்லா மறந்தி ரெம்மவர்காள் என்னே கொடுமை யீங்கிதுவே. I வீமன் திறலு மவற்கிளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற சேம மணிப்பூந் தடநாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறுங் காம நுகர்தல் இரந்துண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்துபினர் ஈமம் புகுத லிவைபுரிவார் என்னே கொடுமை யிங்கிதுவே! 2 4-4- 1906