பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி சொந்த நாட்டிற் பரர்க்கடிமை ச்ெய்தே துஞ்சிடோம்-இனி-அஞ்சிடோம்: எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ?-தெய்வம்-பார்க்குமோ? வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்து வோம்:-முடி-தாழ்த்துவோம்: எந்த மர்ருயி ரன்னையைப் போற்றுதல் ஈன மோ?-அவ-மானமோ? பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளைகொண்டு போகவோ?-ந்ாங்கள்-சாகவோ? அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ?-உயிர்-வெல்லமோ? நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ?-பன்றிச்-சேய்களோ? நீங்கள் மட்டும் மனிதர்களோ? இது நீத மோ?-பிடி-வாதமோ? பார தத்திடை அன்பு செலுத்துதல் பாப மோ?-மனஸ்-தாபமோ? கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்ற மோ?-இதில்-செற்றமோ? ஒற்றுமை வழியொன்றே வழியென்பது ஒர்ந்திட் டோம்:-நன்கு-தேர்ந்திட்டோம்; மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம் மலைவு ருேம்:-சித்தம்-கலைவுருேம். சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம் சாயு மோ?-ஜீவன்-ஒயுமோ? இதையத் துள்ளே இலங்கு மஹாபக்தி! ஏகுமோ?-நெஞ்சம்-வேகுமோ?