பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வாழ்க நீ எம்மான் மகாத்மா காந்தி பஞ்சகம் வாழ்க நீ! எம்மான். இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசத் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க! I அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, (செல்வம், குடிமையி லுயர்வு, கல்வி, ஞானமும் கூடி யோங்கிப் படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குளே முதன்மை யுற்றாய்! 2 வேறு கொடியவெந் நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ? இடிமின்னல் தாங்கும் குடைசெய்தான் என்கோ? என்சொலிப் புகழ்வதிங் குனையே? விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன வெம்பிணி யகற்றிடும் வண்ணம் படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம் படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்! 3 தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும் பிறனுயிர் தன்னையும் கணித்தல்: மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணர்தல்; இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்ருங்கு இழிபடு போர், கொலை, தண்டம், பின்னியே கிடக்கும் அரசிய லதனில் பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்! 4.