பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் விடுதலை 93. களுக்கு விடுதலை கொடுத்தால் ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும் என்றும், வால் கrத்திரம் வகையராக் களெல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் கடுங்குகிருர்கள். மதருஸ் மெயில் போன்ற ஆங்கிலேயப். பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத் தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். "ஓஹோ ஹோ ! ஹோ இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர் மஹாரா. ஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும் மலை யாளிகளையும் தின்று விடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும் குர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளிகளின் எலும்புகளை மாலையாகப் புனைவர்” என்று சொல்லிப் பெருமூச்சு விடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப் பிள்ளை, சிதம் பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க் கேளுங்கள். அப்படிப் பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது. ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால், அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம் நீங்கும். அவ்வளவுதான்' என்று. சொல்லுவார்கள். அது போலவே, பெண்களுக்கு விடுதலே கொடுத்ததனல் ஜன. சமூகம் குழம்பிப் போய்விடும் என்று சொல்லுவோர், பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன் வாழ்வதை தாம் பார்க்கக்கூடா தென்று அகுயையால் சொல்லுகிருர்களே யொழிய வேருென்று. மில்லை. விடுதலை என்ருல் என்ன அர்த்தம் ? விடுதலே கொடுத் தால் பிறகு ஸ்திரீகள் என்ன கிலேயில் இருப்பார்கள் ? பெண். களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்ருல், என்ன செய்ய வேண்டும்? வீடுகளே விட்டு வெளியே துரத்திவிடலாமா ? செய்ய வேண்டிய விஷயமென்ன ? என்று பலர் சங்கிக்கலாம். இங்ங்னம் சங்கையுண்டாகும்போது, விடுதலேயாவது யாது?’ என்று மூலத்தை விசாரிக்கும்படி நேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகு சுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்