பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டு நாகரிகம் 101 ஷேக்ஸ்பியர் என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும் திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது காட்டில் எப்போதேனும் தோன்றியிருப்பதுண்டா ? ஏன் தோன்றவில்லை? இதனால் இயற்கையிலே ஸ்திரீகள் ஆண் மக்களைக் காட்டிலும் புத்தியில் குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகின்ற தன்ருே ? ' என்கிருர்கள். தமிழ்நாட்டிலோவெனில், இப்படிப்பட்ட வாதம் செல்லாது. அதற்கு கேர் எதிரிடையாக இக்காட்டில் ஸ்திரீகள்:-"ஒளவை யாரைப் போல் கவிதையும் சாத்திரமும் செய்யக்கூடிய ஒர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிருன ? ஏன் பிறக்கவில்லை ? இதனின்றும் ஆண்மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத் திறமையில் குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிற தன்ருே ?' என்று வாதிக்கக் கூடிய நிலைமையிலிருக்கிருர்கள். மகிமை பொருந்திய ஆத்ம ஞானியாகிய ஒளவையார் இயற்றி யிருக்கும் 'ஒளவை குறள்” என்ற ஞான நூல் தமிழ் காட்டு யோகிகளாலும் சித்தர்களாலும் உபநிஷத்துக்களுக்குச் சமான மாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும் மோr. சாஸ்த்திரத்துக்கும் இந் நூல் முக்கிய பாடங்களில் ஒன்ருகக் கருதத்தக்கது. மேலும் யோகாதுபூதி ஸம்பந்தமாகப் பிறர் எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அஸாதாரணமுமாகிய சொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல் இன்றியமையாத தென்ற கருத்துடன் வேலை செய்திருக்கிருர்கள். ஒளவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ் கடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக் கிறது. 'சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்' என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஒளவை ஒப்பற்ற வள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களே யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வ தாகிய அற்புதத் தொழிலே உயர்ந்த கவிராசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வ சக்தி பெருத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிருர்கள். இந்த அற்புத தொழிலிலும் ஒளவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்.