பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அமிர்தம் தேடுதல் ' காக்க கின்னருட் காட்சியல்லாலொரு போக்குமில்லே " -தாயுமானவர். பல வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக் கொண்டு வந்தான். " துரங்கையிலே வாங்கிற மூச்சு - அது சுழிமாறிப் போனலும் போச்சு ' இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாய் விட்டது. என்னடா இது 1 இந்த உடல் இத்தனே சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்தில் நாம் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும் ? ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய்கிருன். அறிவே நமது வடிவமாக அமைத்திருக்கிருன். அறிவு இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்பமும் கொண்ட உலகமொன்று கம்மோடிருக்கிறது. எப்போதும் இவ்வுலகம் இன்பம். இந்த உலகம் கவலையற்றதாகும் ; இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின்மீது தான் நம்மால் ஸஞ்சரிக்க முடிகிறது. இதுபோல கணக்கில்லாத மண்டலங்கள் வானவெளியிலே சுழல் கின்றன. அவற்றின் இயல்பையும் காம் அறிவினலே காண்கிருேம். அவற்றிலே ஒரு பகுதியில் வடிவங்களேக் கண்ணுலே தூரத்தி லிருந்தே பார்க்கிருேம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகு மயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுதும் ஒரு மேற்கட்டிபோலத் தோன்றுகிறது. இடை யெல்லாம் ஒரே தெளிவான வெளி, ஸஅரியன் செய்கிற ஆயிர விதமான ஒளியினங்கள். மலை, காடு, நதி, கடல்-அழகு. தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நாம் அறிவினலே பொருள் களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணிர், குளித்தால் இன்பம். குடித்தால் இன்பம்; தீ, குளிர்