பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாரதி தமிழ் கங்தையை உடுத்திக்கொண்டு தெருக்களில் உலாவுவார். இவரு டைய மஹிமை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் மாத்திரம் எப்படியோ தெரிந்திருக்கிறது. தெருவில் இவர் நடந்து செல்லு கையில் ஸ்திரீகள் பார்த்து இவரைக் கையெடுத்துக் கும்பிடுவார் கள். குழந்தைகளெல்லாம் இவரைக் கண்டவுடன் தாயை நோக்கி ஓடுவதுபோல் ஓடி இவருடைய முழங்காலை மோர்ந்து பார்க்கும். இவர் பேதைச் சிரிப்புச் சிரித்துக் குழந்தைகளே உச்சி மோர்ந்து பார்ப்பார். ஆல்ை ஸாமானிய ஜனங்களுக்கு அவருடைய உண்மையான மஹிமை தெரியமாட்டாது. கண் மூடித் திறக்கு முன்னதாகவே கைச்சுவர் மேல் ஒரு பாய்ச்சல் பாய்ந்து அங்கிருந்து மேல் மெத்தைக்கு இரண்டாம் பாய்ச்சலில் வந்துவிட்டார். இவரைப் பார்த்து இவர் போலே தானும் செய்ய வேண்டுமென்ற எண்ணங்கொண்டவய்ை வேணு முதலி ஜாக்கிரதையாக ஏருமல் தானும் பாய்ந்தான். கைபிடிச் சுவர் மேல் சரியாகப் பாய்ந்து விட்டான். அங்கிருந்து மேல் மெத்தைக் குப் பாய்கையில் எப்படியோ இடறித் தொப்பென்று கீழே விழுந்தான். இடுப்பிலேயும் முழங்காலிலேயும் பலமான அடி. ஊமைக் காயம். என் போன்றவர்களுக்கு அப்படி அடிபட்டால் எட்டு நாள் எழுந்திருக்க முடியாது. ஆனல் வேனு முதலி நல்ல தடியன். ' கொட்டாப்புளி ஆஸாமி. ஆதலால் சிலர் கிமிஷங்களுக்குள்ளே ஒருவாறு கோவைப் பொறுத்துக் கொண்டு மறுபடி ஏறத் தொடங்கினன். குள்ளச் சாமியார் அப்போது என்னே நோக்கி : நாமும் கீழே இறங்கிப் போகலாம் என்று சொன்னர். சரியென்று நாங்கள் வேணு முதலியை ஏற வேண்டாமென்று தடுத்து விட்டுக் கீழே இறங்கி வந்தோம். இரண்டாங் கட்டு வெளி முற்றத்திலேயே மூன்று நாற்காலிகள் கொண்டு போட்டு உட்கார்ந்து கொண்டோம். அப்போது வேணு முதலி என்னே நோக்கி அங்கே தனியாக ஹனுமாரைப் போலப் போய்த் தொத்திக் கொண்டு என்ன செய்தீர் ?' என்று கேட்டான். " சும்மா தான் இருந்தேன் ' என்றேன். வந்து விட்டதையா வேணு முதலிக்குப் பெரிய கோபம். பெரிய கூச்சல் தொடங்கி விட்டான்.