பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாரதி தமிழ் வேண்டும் ' என்று பிரார்த்தனே செய்தேன். ' கொடுத்தேன் ” என்றது வேப்பமரம்............... இந்த சமயத்தில் நான் உண்மையாகவே தூக்கந் தெளிந்து கண்ணே விழித்தெழுந்து கின்றேன், எழுத்தாணிக் குருவிகளும், சிட்டுக் குருவிகளும் வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும் ஓந்திகளும் ஆடியோடிக் கொண்டிருந்தன. காக்கைகளும், கிளிகளும், பருந்துகளும், தட்டான் பூச்சிகளும், வேறு பலவகை வண்டுகளும் ஒளிக் கடலிலே களித்தோணி கொண்டு, நீந்துவதுபோல் உலாவி வந்தன. கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஒராண் குயிலும் ஒரு பெண் குயிலும் ஒன்றுக்கொன்று காதற் பாட்டுக் கள் பாடிக் கொண்டிருந்தன. ஆண் குயில் பாடுகிறது : " துஹா, துஹT, துஹ" துஹ7, துஹ7 துஹ” ராதா ரே.” (இதன் பொருள் : நீ, நீ, நீ, ராதையடீ) பெண் குயில் பாடுகிறது : " துஹ", துஹ”, துஹ" ராதா கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ” வேப்ப மரம் தனது பசிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துத் கொண்டிருந்தது. " என்ன ஆச்சரியமான கனவு கண்டோம்!” என்றெண்ணியெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங்கிற்று. வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.