பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாவலன் பாரதியை - அவன்
நண்பர்கள் சிறைமீட்டார்
காவலில் வாடியவன் - மீண்டு
கடையம் சென்றுவிட்டான்

தாவும் குழந்தைகளைப் - பிரிவால்
தவிக்கும் மனையாளைப்
பாவலன் சென்றுகண்டான் - அவர்கள்
பக்கம் அமர்ந்து கொண்டான்


32