பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் பாடல் ஒன்றை அற்புதமாகப் பாடுகிறார். பாரதி இந்தப் பாடலில் மந்திரம் தந்திரம் எந்திரம் ஆகியவற்றை அதாவது தனது தத்துவம் கொள்கை,வேலை திட்டம் முழுவதையும் முன்வைத்து பாரத நாட்டு மக்களுக்கு நல்ல காலம் வருகுது என்று குடுகுடுப்பைக் காரனாக வந்து குறி சொல்லி நமக்கு நம்பிக்கையூட்டுகிறார். பாரதத்தின் பண்பாட்டு வழியில், பாரதி காட்டும் பாதையில் புதிய நெறி வழியில் நாடு முன்செல்லட்டும். உலகின் முதன்மை பெறட்டும். பாரதம் வாழ்க, பாரதி வாழ்க. பாரதியின் நாமம் வாழ்க பாரதியின் புகழ் வாழ்க, வாழ்க! HH நூலாசிரியரைப் பற்றி நூலாசிரியர் : அ. சீனிவாசன் நூலாசிரியர் திரு. அ. சீனிவாசன் ஒரு மூத்தமிழறிஞர் எழுத்தாளர். பத்திரிகையாளர் முன்னாள் விமானப் படை வீரர். பல நாடுகளிலும், இந்தியாவின் பல. மாநிலங்களிலும், விரிவாகச் சுற்றுப் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். தனது பள்ளிப் படிப்பு காலத்திலேயே பன்னிரண்டாவது வயது முதலே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு நாட்டுப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசீய காங்கிரஸ், காங்கிரஸ்-சோஷலிஸ்ட் கட்சி (1937 ம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி என்னும் பெயரில் ஒரு தீவிரமாகட்சி அமைந்திருந்தனர். அக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினர்களாயிருந்தனர்). சுயமரியாதை இயக்கம், பின்னர் பொதுவடுமை இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றியவர். சிறைவாசம், சித்திரவதை, கொடுமையானபோலீஸ் அடக்குமுறைகளுக்கு ஆளாகித் தியாகத் தழும்புகள் ஏறியவர். இரண்டாவது உலகப் பெரும் போர் காலத்தில் விமானப் படையில் சேர்ந்து இராணுவப் பயிற்சியும் தகவல் தொழில் நுட்பப் பயிற்சியும் பெற்றவர். திரு. அ.சீனிவாசன் முன்னாள் இராமநாதபுரம் மாவட்டம் இன்றைய விருதுநகர் மாவட்ட நீ வில்லிபுத்துர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் மெட்டவெ. அய்யப்ப நாயுடு, தாயார் மெட்ட வெங்கட்டம்மாள், உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள். 1957ஆம் ஆண்டுமே மாதம் 31ஆம் தேதி திரு. அ.சீனிவாசன் அவர்களுக்கு திருமணம் ஆயிற்று. மனைவி திருமதி: சி.நாகலட்சுமி, குழந்தைகள் இரண்டு பெண்கள், ஒரு ஆண். பெண்களில் மூத்தவர் திருமதி. கே. பகீரதி எம்.ஏ.பி.எட். (தமிழ்) திருமணமாகி விட்டது. சென்னையில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இளையவர் குவைதேகி, கர்நாடக இசையில் பட்டம் பெற்று கோவையில் இசை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மகன் ஏ.எஸ். வாசன் (பழைய பெயர் எஸ். அய்யாசாமி) ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் மற்றும் பி.காம், படிப்பு முடித்தவர். சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகம், இயக்கம் ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார். அத்துடன் தந்தையார் எழுதி வரும்