பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டுதளத்தில் பாரதி அ.சீனிவாசன் 38 என்று பாரத மாதாவின் முழுவடிவத்தைப் பற்றி எடுத்துக் கூறத் தொடங்குகிறார். இராவணனுடைய தலைமகன் மேகநாதன். அவன் மிகப் பெரிய வல்லமை மிக்க வீரன். போரில் தனது தந்தையைக் காட்டிலும் அதிகமான சாகசங்களைச் செய்தவன் என்று கூடக் கூறலாம். வில்வித்தையில் வல்லவன். எல்லா அஸ்திரங்களையும் கற்றவன். இதர போர்ப்பயிற்சிகளையும் பெற்றவன். மாயாஜாலப் போர் கற்றவன் ஆகாயத்தில் மறைந்து நின்றும் பேர் புரியும் வல்லமைபடைத்தவன். பல வகைத்தவங்களும் வேள்விகளும் செய்து வரங்களும் பலமும் பெற்றவன்.இந்திரனையே வென்று இந்திரசித்தன் என்னும் பெயரும் புகழும் பெற்றவன். தேவர்களும் அவனுக்கு அஞ்சி வாழ்ந்தனர். அனுமனையும் கூட பிரம்மாஸ்திரத்தால் கட்டியவன். இலக்குவனையும் மற்றவர்களயுைம் எதிர்த்தும் மாயாஸ்திரங்களையும் நாகாஸ்திரங்களையும் நான்முகன் படையையும் ஏவி இருமுறை போரில் வெற்றி கண்டவன். வீடணனும் அனுமனும் இல்லாதிருந்திருந்தால் இந்திரசித்தனை வெல்வது கடினமாக இருந்திருக்கும். அத்தகைய ஒரு வீரன் இராவணன் பக்கத்தில், அதர்மத்தின் பக்கத்தில் நின்றதால் போர்க்கள்தில் இறந்து பட்டான். இலக்குவனின் கணைகளால் இரண்டு துண்டாக்கப்பட்டான். இந்தக் கணைகள் பாரத ராணியின் வில்லிலிருந்து வெளிவந்த கணைகள். "இந்திரசித்தன் இரண்டுதுண்டாக எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள் மந்திரத் தெய்வ நம் பாரத ராணி வயிரவி தன்னுடைய வில்" என்று பாரதி பாடுகிறார். இந்து தர்மத்தின் மய்யமான தத்துவக்கருத்து பரம் பொருள் ஒன்று அதுவே பிரபஞ்சத்திலுள்ள சகல விதமான பொருள்களிலும் நிலை கொண்டிருக்கிறது. உலகமே, இப்பேருலகமே அப்பரம் பொருள் மயமானது. "சர்வம் விஷ்ணு மயம் ஜகத் உலகில் உள்ள அனைத்தும் விஷ்னுமயமானது என்பது கீதையின்மய்யக் கருத்தாகும். அப்பரம் பொருளின் மக்களே நாம் எ ல் லோரும். மக்கள் மட்டு மல் ல அனைத்து ஜீவ ரா சி களும் அதன்படிவங்களேயாகும். இத்தகைய பரம் பொருளின் வடிவமாகிய இவ்வுலகம் இன்பமயமானது. வாழ்க்கைக்கு உகந்தது. இந்த பூமி, அதில் உள்ள கடல்கள் மலைகள், ஆறுகள், மரங்கள், இதர தாவரங்கள், விலங்குகள், பறவைகள், இதர பஞ்சபூதசக்திகள், விண்வெளி, நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், இதர கோள்கள், அனைத்தும் இன்பமயமானவை.