பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 70 "கற்பனைத் தேனிதழாள் - சுவைக் காவிய மெனும் மணிக்கொங்கையினாள் சிற்பமுதற்கலைகள்- பல தே மலர்க்கரமெனத் திகழ்ந்திருப்பாள் சொற்படு நயமறிவார் - இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறியார் விற்பனத்தமிழ்ப்புலவோர் - அந்த மேலவர்நாவெனும் மலர்ப்பதத்தாள்" என்றும் பாடி மகிழ்ந்து வாணியைச் சரண் புகுந்தேன் என்று கடவுள்.வணக்கத்தில் பாரதி கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தின் கடவுள் வணக்கத்திலும் முதலில் பராசக்தி வணக்கத்தில், "ஆங்கொரு கல்லை வாயிற்படியென்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்று உயர்த்தினான், உலகினோர் தாய் நீ உனக்கு எவரை எங்ங்னம் சமைத்தற்கு எண்ணமோ" " அங்ங்னம் சமைப்பாய் உன்னை நான் சரணடைந்தேன் என்னை இருங்கலைப் புலவனக்குவாயாக" என்று வேண்டிக் கொண்டு அடுத்து சரஸ்வதி வணக்கங்கூறி அக்கவிதையில் மிகவும் நுட்பமான முறையில் அறிவியலையும் தத்துவ இயலையும் இணைத்து தனது மெய்ப்பொருள் விளக்கத்தைக் கூறுவதைக் காணலாம். "இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் இடையின்றி கதிர்களெல்லாம் சுழலுமென வானுலார் இயம்புகின்றார் இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப் பொருட்கெல்லாம் இயற்கையாயின் இடையின்றி கலை மகளே நினதருளில் எனதுள்ளம் இயங்கொணாதோ என்று பாரதி கலைமகளை வேண்டுகிறார். இதுவே பாரதப் பண்பாட்டின் வழியில் சிந்திக்கும் பாரதியின் தொடர்ச்சியான கருத்து வடிவம் என்பதைக் காண்கிறோம். கதையில் அஸ்தினாபுர நகரையும் அந்நகரமக்களையும் வர்ணிக்கும் போது "சிந்தையில் அறமுண்டாம் எனிற் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம்" என்றும்.