பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 75 ஊரையாளும் முறைமை - உலகில் ஓர் புறத்துமில்ை ണ്ഡ" என்று கூறி பாரதி அரசியல் நெறியின் ஆட்சி முறையின் அவல நிலைப்பற்றி உள்ளம் நொந்து குறிப்பிடுகிறார். காயுருட்டலில் பாஞ்சாலியை பணயமாகச் சகுனி வென்றுவிட்டான். துரியோதனன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து துள்ளி எழுந்தான். கூத்தாடினான். மாமனைக் கட்டித் தழுவிக் கொண்டான். பாஞ்சாலியை சபைக்கு அழைத்து வரும்படி துரியோதனன் ஆணையிட்டான். அப்போது உலகில் அதர்மக் குழப்பம் ஏற்பட்டதாக குறிப்பிடுகிறார். திரெளபதியை துரியோதனன் மன்றுக்கு அழைத்துவரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம் என்னும் தலைப்பில் பாரதி தனது கவிதை வரிகளில் ஒரு அபூவர்மான காட்சியை முன்வைக்கிறார். அது ஒரு ஈணையற்ற ஒரு அற்புதமான இலக்கியக் காட்சியாகும். இவை நமது உள்ளத்தை உருக்கும் கவிதை வரிகளாகும். காவியத்தின் இந்தக் கவிதை வரிகள் பாரதியின் கவிதா மண்டலத்தின் சிகரத்தை எட்டி இருக்கிறது எனக் கூறலாம். தர்மமே அழிந்து விட்டது. சத்திமே பொய்யாகிவிட்டது. பெருமை மிக்க த வங்கள் எல்லாம் பெயர் கெட்டு ப் போய் மண்ணாகி விட்டன. தேவலோகத்தில் வாழும் தேவர்களின் வயிற்றில் எல்லாம் நெருப்புப் பற்றி அவர்கள் எரிந்து போனார்கள். மோன நிலையில் இருந்த முனிவர்கள் எல்லாம் முறைகெட்டுப் போய் மயங்கிடக்கிறார்கள். வேதங்கள் எல்லாம் அர்த்தமற்றுப் போய் வெறும் சொற்கள் ஆகிவிட்டன. இசைநாதங்கள் எல்லாம் சீர்குலைந்து போய்ப் பாழாகிக் கெட்டுவிட்டன. அழகிய கந்தர்வர்கள் எல்லாம் களையிழந்து போனார்கள். சித்தர்முதல் அந்தரத்தில் வாழ்வோர் எல்லாம் பித்தம் பிடித்து அலைகிறார்கள். படைப்புக் கடவுளான நான்முகனுடைய பேச்சு அடங்கிவிட்டன. கல்விக்கடவுளான நாமகட்கு புத்திகெட்டுவிட்டது. நீலமேக வண்ணனான திருமால் பல கோயில்களில் பள்ளிகொண்ட பெருமானாக இருக்கிறார். திருவரங்கத்தில் கிடந்த வண்ணத்தில் இருக்கிறார். திருவனந்த புரத்தில் அனந்த பயனத்தில் இருக்கிறார். இதை அறிதுயில் என்று கூறுவார்கள் அதாவது தூங்குவதாக ஒரு பாவனையேயாகும். அந்த அறிதுயிலை விட்டு பெரிய பெருமாள் ஆழ்துயிலில் நிரந்தரமாகத் துங்கிவிட்டார் போலும். செல்வமும் பேரழகும் வாய்ந்த திருமகள் தனது அழகு கெட்டுப்புகை மூடிப்போனாள். நீக்கல் கடவுளான நீலகண்ட மகாதேவன். யோக நிலையை விட்டு மதி மயக்கம் கொண்டு விட்டான். இன்னும் பராசக்தியை அவள் மீது திராத பக்தி கொண்ட பாரதி வாலை, உமாதேவி, மாகாளி வீறுடையாள், மூலமகாசக்தி, திரிசூலம் ஏந்தியவள், மகாமாயை, சிங்கவாகனத்தில் ஏறி உலகைச் சீராகக் காப்பவள், காலனுக்கே ஏவல் செய்பவள், பல் கணத்தாள் இவ்வாறு பலவாறு போற்றப்படும் ஆதிபரா சக்தியின் நெஞ்சமும்கல்லாகிவிட் து. டிவி மிக்க சூரியன்முகத்திலேயே இருள் படர்ந்து விட்டது.