இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இசையில் தன்னை மறந்து நிற்கும் பண்புடையவன். கூத்தின் வகையையும் குறிப்பையும் நன்குணர்ந்துகளிக்கும் கோமான். ஆகையால் அவனிடம் வரும் புலவரும், பாணரும், விறலியரும், கூத்தரும் நாளுக்கு நாள் மிகுதியாயினர். அவனுடைய ஈகையையும் வீரத்தையும் பிற நற்பண்புகளையும் கூறும் பாடல்கள் பல எழுந்தன. அவன் புகழ் தமிழ் நாடு முழுவதும் பரவி அதற்கப்பாலும் செல்லலாயிற்று.